|
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
இந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறுவயதில் நிகழ்ந்தவை.
இந்தக் கதைகளின் நாயகன் நான் அல்ல. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சிறுவன்.
அவனுக்கு அப்போது பல விஷயங்கள் 'ஏன்' என்று புரியவில்லை. அந்தப் புரியா ஆச்சரியத்தை
முப்பது வருஷம் கடந்து எழுதும்போது அந்த வியப்பைப் பாதுகாக்க முயற்சித்திருக்கிறேன்.
எந்தக் கதாசிரியனும் நிஜத்தை அப்படியே எழுதமாட்டான். கோர்ட் உபத்திரவங்களை
நீக்கிவிட்டாலும் அப்பட்டமான நிஜம் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஜோடனைகள்
தேவையாகத்தான் இருக்கின்றன. எனவே இந்தக் கதைகளில் கற்பனைச் சம்பவங்கள் கலந்துதான்
இருக்கின்றன.
| Available Options: |
| Download: |
|
|