|
கொலை அரங்கம்
கொலை அரங்கம் 1984ல் வெளியானபோது ஈழ விடுதலைப் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிகள்
எழுப்பிய காலம். அந்தப் போராட்டத்தை அரசியல்வாதிகள் பலர் பலவிதத்தில், தத்தம்
சுயநலங்களுக்காக பொய்யான அனுதாபங்களைக் காட்டி, தம்மேல் வெளிச்சம் பெறுவதற்காகப்
பயன்படுத்தினார்கள். இது என் மனதில் ஒரு கற்பனைக் கதையாக உருவாகி திரில்லர்
வடிவத்துக்கு மாறியது.
அதுவே 'கொலை அரங்கம்'. கணேஷ்-வசந்த் நாவலின் முதல் அத்தியாயத்திலிருந்தே தோன்றி
கதையை நடத்தும் நாவல்களில் ஒன்று. 'குங்குமம்' வார இதழில் இந்தக் கதை வெளிவந்தது.
நாகப்பட்டினத்தில் குமரிப்பதிப்பகம் இதைப் புத்தகமாக வெளியிட்டார்கள். அந்த
நாட்களில் பரபரப்பான புத்தக விற்பனைக்கான புத்தகச் சந்தைகளும் இல்லை.
| Available Options: |
| Download: |
|
|