கடவுள் வந்திருந்தார் சுஜாதாவின் மிகப் பிரபலமான நாடகம். நூற்றுக்கணக்கான முறைகள் மேடையேற்றப்பட்டு கல்கத்தாவிலிருந்து, மஸ்கட், கலிஃபோர்னியா வரை இந்த நாடகம், அமெச்சூர் நாடகக் குழுவினரால் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. அறிவியலா? அற்புதச் செயலா? என்ற கேள்விக்கு சுஜாதா தரும் பதில் இந்த நாடகம்.