|
நிறமற்ற வானவில்
நிறமற்ற வானவில்... எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக்
குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்துடிப்புடன்
சித்திரித்துக் காட்டுகிறது. இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்கு பஞ்சமில்லை. கணவனை
இழந்த மனைவி; தாய் தந்தையை இழந்த குழந்தைகள்; அனாதையாக விடப்பட்ட முதியோர்கள்
இவர்களுக்கெல்லாம் என்ன சொல்லி எப்படி தேற்ற முடியும். எல்லாவற்றையும்விட
விபரீதமானது தற்கொலை எண்ணம்! உளவியல் ஆய்வாளர்கள் கருத்தை அடிப்படையாகக் கொண்டு
இந்த நாவலை சுஜாதா அழகாக முடித்துள்ளார்.
| Available Options: |
| Download: |
|
|