|
ஒரே ஒரு துரோகம்
இந்தக் கதையை ஒரு வாசகனின் நிலையிலிருந்து புதிதாகப் படிக்கும்போது
சம்பத் மாதிரியான பிரகிருதிகளுக்கு நம் சமூகம் ராஜியைப் போல் தண்டனை தராமல்,
போற்றிப் பாதுகாக்க அவர்களை சிறையில் அடைத்த மறுவாரமே பெயிலில் டி.வி.காமிராக்கள்
தொடர சிரித்துக்கொண்டே வெளிவருகிறார்கள். அவர்கள் தொடர்கதை எழுதுகிறார்கள். சட்டம்
அவர்களுக்கு மன்னிப்புத் தராவிட்டாலும் தாமதம் தருகிறது. நாளடைவில் அவர்கள்
குற்றங்களை மறந்துபோகிறோம். மீண்டும் வேறு பெயர்களில் வேறு பொய்கள் சொல்லி சுகமாக
வாழ்கிறார்கள். நீதிமன்றங்கள் தரும் நிழலில் பதுங்குபவர்களைத் தண்டிக்க இன்று
ராஜியின் முறையுடன் 'என்கவுண்டர்' என்ற மற்றொரு முறையும் புதிதாகத் தோன்றியுள்ளது
வருத்தத்திற்குரியதே. சமூகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேறு மார்க்கங்கள்
இன்றைய தினங்களில் இல்லை.
| Available Options: |
| Download: |
|
|