|
இளமையில் கொல்
இந்த குறுநாவல் 1987ல் எழுதப்பட்டது. 'சுஜாதா' என்கிற மாத இதழில்
வெளிவந்தது. ‘சுஜாதா’ என்ற பெயர் பரவலாக அறியப்பட்டு ஏறக்குறைய ஒரு ‘டிரேட்
மார்க்’காக மாறியிருந்த காலம் அது. மேகலா, குங்குமச்சிமிழ் போன்ற பல பெயர்களுடன்
மாத நாவல்கள் தழைத்த காலம். பேப்பர் வியாபாரிகள் ந்யூஸ்ப்ரிண்ட் கோட்டா
கிடைப்பதற்காக மிச்சமுள்ள காகிதத்தைப் பயன்படுத்த நாவல்களாக அச்சடித்து வெளியிட்ட
காலம். அப்போது ஹரிராமன் என்கிறவர் ‘சுஜாதா’ என்கிற பெயரைப் பதிவு செய்துவிட்டார்.
பெங்களூருக்கு வந்து என்னை வற்புறுத்திக் கேட்டதில் எழுதித் தந்த கதை இது.
இப்போது இருபது ஆண்டுகள் கழித்து இதைப் படிக்கும்போது எந்தவிதத்திலும் எந்த
அவசரத்திலும் சுவாரஸ்யமாக கதை சொல்லும் திறமையை இழந்துவிடவில்லை என்பதில் சற்று
திருப்தி ஏற்படுகிறது. இதனுடன் ‘தப்பித்தால் தப்பில்லை’ என்ற குறுநாவலையும் இணைத்து
‘விசா’ பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். ‘விசா’வில் என் புத்தகங்கள் நூறை
நெருங்கிவிட்டன.
| Available Options: |
| Download: |
|
|