ஏறக்குறைய சொர்க்கம் எந்தக் கதையும் முடிவதில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நிறுத்துகிறோம், அவ்வளவே. அறுதியிட்டு இதுதான் கதை இனிமேல் கிடையாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டால், புதுமைப்பித்தனின் 'சாப விமோசனம்' போன்ற கதைகள் உருவாகியிருக்க முடியாது. பின் குறிப்பாக ஒன்று. இந்தக் கதையின் முடிவு பிடித்திருக்கிறது என்று சொன்ன பெண்களெல்லாம் அழகாக இருந்தார்கள்.